Friday, May 21, 2010

மர்ம யோகி அகத்தியர் 3

அகத்தியருக்கும் ராவணனுக்கும் உள்ள தொடர்புகளை இன்னும் சற்று பார்க்கலாம் பிரபஞ்சசாரம் என்ற ஓலைச் சுவடி கூற்றுப் படி அகத்தியர் பிறந்து ஏறத்தாழ 9000 வருடங்கள் ஆகிறது ராமன் அகத்தியர் ராவணன் ஆகிய மூவரும் சம காலத்தவர் ஒருவரை ஒருவர் சந்தித்து உள்ளனர் ஆகவே ராமாயணம் நடந்ததும் 9000 ஆண்டுகளுக்கு முன்பு தான் நம்முடைய சரித்திர ஆய்வாளர்கள் இந்த காலக் கணக்கை  ஒத்துக் கொள்வார்களா   தெரியாது                                                                                                                                    ராவணனின்தாத்தா புலஸ்தியர் சப்த ரிஷிகளில் ஒருவர் அகத்தியரும் சப்தரிஷிகளில் ஒருவரே ராவணன் வீணையில் வித்தகன் என்பது பிரசித்தம் அவனது கொடியில் சின்னமாக வீணைதான் இருந்தது வீணை வாசித்துதான் அவன் சிவனை மயக்கி பலவரங்களைப் பெற்றான் அப்படிப் பட்ட ராவணனை அகத்தியர் வீணைப் போட்டியில் தோற்கடித்து இருக்கிறார் ராவணன் ஆண்டது இலங்கையை மட்டுமல்ல சுனாமி வந்து அழிப்பதற்கு முன்பிருந்த குமரிக் கண்டத்தையும் சேர்த்துதான் எனத் தெரிகிறது  இந்தோனேசியா வரை இராமாயண  கதையின் அடையாளங்கள்   கிடைப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் ஆனால் தமிழ் நாட்டை ராவணன் ஆண்டதாக குறிப்பு இல்லை மூன்று உலகங்களையும் வென்ற ராவணன் ஏன் [அவன் தமிழ் பேசும் மன்னனாக  பரவலாக கருதப் படும் பட்சத்தில்]தமிழகம் வரவில்லை அகத்தியர் தான் காரணம் எனக் கூறப்படுகிறது ராவணன் தமிழ்நாடு பக்கம் வராமல் காந்தர்வத்தால் வசியம் செய்து அகத்தியர் தடுத்துவிட்டார் எனப் படுகிறது.
                                                                     அகத்தியரைப் போலவே ராவணனும் ஒரு mysterious guy  எனலாம் ராவணன் நம் தமிழ் சினிமாக்களில் வருவதுபோல் நாயகியை  தூக்கிச்சென்று  ரேப் செய்யமுயலும் மூளையற்ற மாமிசமலை வில்லன் அல்ல அவனது பத்து தலைகள் அவனது அளவற்ற அறிவைக் காட்டும் குறியீடாக இருக்கக் கூடும் ' வீர்யம்'  மிக்க  ஆண்மகன் எனவும் தெரிகிறது அவனது அந்தப் புறம் நிரம்பி வழிந்தது விரும்பாத பெண்களையும் அவன் விட்டுவைப்பதில்லை தான் ஆனால் சீதையிடம் அவன் தன் வலுவைக் காண்பிக்கவில்லை  போரில் மட்டுமல்ல வீணை போன்ற நுண்கலைகளிலும் தேர்ச்சி இருந்தது [ஹிட்லருக்கு ஓவியத்தில் இருந்த  புலமை ஒப்பு நோக்கத் தக்கது ]தேவர்களைக் கொடுமை செய்தாலும் அவனது நாட்டு மக்களை நன்றாகவே வைத்திருந்தான்                                                                                              ராவணன் இலங்கையை ஆண்ட சமயத்தில் தமிழ் நாட்டில் இருந்த மன்னர்கள் யார் ராமாயணம் வானரங்களாக குறிப்பிடும் சர்ச்சைக்கு உரிய மக்கள் யார் என்பதற்கெல்லாம் விடை ஒரு வேளை பொதிகை மலையிலும் சதுரகிரியிலும் தலை மறைவாய் சுற்றிக் கொண்டிருக்கும் அகத்தியரிடம் இருக்கலாம் ஏனெனில் இந்த சம்பவங்களுக்கு எல்லாம் அவர்தான் ஒரே ஒரு ஐ விட்னெஸ் போல தெரிகிறது!

2 comments:

சுதர்ஷன் said...

நல்ல பதிவு .. முடிந்தால் விரிவாக எழுதுங்கள் .. இன்னும் படிக்க வேண்டும் .. வாழ்த்துகள் ..

பெம்மு குட்டி said...

[ஹிட்லருக்கு ஓவியத்தில் இருந்த புலமை ஒப்பு நோக்கத் தக்கது ] ///

ஓவியத் திறமை இல்லைன்னு ஆஸ்திரியாவில இருந்து அனுப்பிடாங்க, அந்த தோல்வியும் அவரைப் பாதிச்சிது ன்னு படிச்சிருக்கேன் ;-))

LinkWithin

Related Posts with Thumbnails