Wednesday, May 12, 2010

கண்ணீரோ காவியமோ

ஆனால் இலக்கியத்தில் கண்ணீர்க் காவியங்களே வெற்றி பெற்றிருக்கின்றன நகைச்சுவை சுவை மிகுந்த எந்த நூலுக்கும் இதுவரை நோபல் புக்கர் போன்றவை கிடைத்தது போல் தெரியவில்லை நாம் கொண்டாடும் அத்தனை இலக்கியப் படைப்புகளும் கண்ணீர் ததும்பியவே அல்லது ஜெயமோகன் சொல்வதுபோல வாழ்வின் வீழ்ச்சியைப் பற்றி பேசுபவை அந்தவகையில் பார்த்தால் விக்டர் ஹுகோ வின் லெஸ் மிசெரபில்ஸ் ஐ தான் உலகின் மிகப் பெரிய கண்ணீர்க் காவியம் அதை கண்ணீர்விடாமல் உங்களால் படிக்கவே முடியாது \ஏழை படும் பாடு என்று தமிழிலும் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது ஞான ஒளி திரைப் படம் அதன் ஒரே  ஒரு கதை இழையை வைத்து எடுத்தார்கள் மதுரையில் படிக்கும் காலத்தில் அறையில் உடன் இருந்த நண்பர் கண்ணீர் வழிய ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார் வில்பர் ஸ்மித் எழுதிய shout at the devil என்ற நாவல் ஸ்மித் பெரிய இலக்கிய எழுத்தாளர் ஒன்றும் அல்ல என்றாலும் அது ஒரு நல்ல நாவல் நான் அவரிடம் உலகின் மகத்தான கண்ணீர்க் காவியமான லெஸ் மிசெரபில் ஐ கொடுத்தேன்... மேலை இலக்கியத்தை விட்டு .உள்ளூருக்கு  வந்தால் இன்று வரை நமது சிறந்த கண்ணீர்க் காவியம் [ஆகவே சிறந்த படைப்பும் கூட ]என ராமாயணத்தை தான் சொல்லவேண்டும் ராமனின் கதை முழுக்க முழுக்க ஒரு tearjerker

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails