Friday, May 7, 2010

குமரி தமிழ்நாட்டுடன் இணைந்தது!

பத்து வருடங்களுக்கு முன்பு மாற்றலாகி குமரி மாவட்டத்துக்கு வந்தபோது உண்மையிலேயே காட்டுக்குள் வந்தாற்போல் இருந்தது காலை எட்டு மணி வரைக்கு வராத சூரியனும் விலகாத குளிரும் நின்ற சீர் நெடுமால் போல் நின்று நீரால் ஆன ஒரு பெருஞ்சுவர் போல் பெய்யும் மழையும் ரோட்டில் சர்வ சாதாரணமாக உலவும் விரித்த கூந்தல் அழகிகளும் ஒரு பெருங்கனவுக்குள் நுழைந்த பிரமையை ஏற்படுத்தின சில இம்சைகளும் இல்லாமல் இல்லை விடிகாலையில் வட்டத் தோசைக்கு மாட்டிறைச்சி தொட்டு சாப்பிடுவதை ஜீரணிக்கவே முடியவே இல்லை இரவு பத்து மணிக்கு பெருச்சாளி போல் வளையை விட்டு வெளிப்போந்து ரோட்டோர கடையில் இட்லி சாப்பிட்டுவிட்டு செகண்ட் ஷோ பார்த்துவிட்டு  டீக்கடையில் பால் அருந்திப் பழக்கப் பட்ட எனக்கு எட்டரைக்கே ஆள் அரவம் அற்றுப்  போகும் மார்த்தாண்டம் சற்று கலவரமாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது இரவு ஒன்பது மணிக்கு பனிப்புகை உலவும் மார்த்தாண்டம் சாலைகளில் ஒரு சிகரெட்டுக்கு ஏங்கி நடக்கையில் இரவு ரோந்து போலிசால் சந்தேகத்துடன் விசாரிக்கப் பட்ட காமடியும் நடந்தது நெல்லை நாகர்கோயில் சாலையில் பயணிக்கையில் இரண்டு மாவட்ட எல்லைகளை கண்திறக்காமலே கண்டுபிடித்து விடலாம் ஆரல்வாய்மொழி தாண்டி குமரி மாவட்ட எல்லைக்குள் நுழைந்ததுமே ஒரு குளிர்ந்த காற்று வீசும் தமிழ்நாட்டுடன் அறுபதிலேயே இணைந்துவிட்டாலும் குமரிக்கு என தனி கலாச்சாரம் அரசியல் உணவு ரசனை காலநிலை இருந்து வந்தது நெல்லை எங்கள்  எல்லை குமரி எங்கள் தொல்லை என்று கலைஞர் கடுப்பானதிற்கு காரணம் இல்லாமல் இல்லை ஆனால் இன்று?நாகர்கோயிலில் இரண்டு வாரமாய் தண்ணீர் வரவில்லை என்று ஒரு செய்தி கோடைக் கால விடுமுறைக்கு குமரி வருவதாக சொன்ன நண்பரிடம் நீர் இல்லாத பேச்சிப் பாறையை எப்படி காட்டுவது என யோசிக்கிறேன் திற்பரப்பு அருவியில் ஒரே கூட்டம் டிராபிக் ஜாம் என்கிறார்கள்  உள்ளூர் மக்களும் நிறைய உண்டு முன்பு 'பாண்டி' மக்களைப் போல உள்ளூர் வாசிகள் தண்ணீரைக் கண்டு இப்படி பரவசப் பட மாட்டார்கள் இன்று மார்த்தாண்டம்  சாலைகளில் விடிய விடிய வாகனங்களும் புழுதியும் பறக்கின்றன யாரும் எட்டரைக்கு கடையை மூடிவிடுவது இல்லை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails