Tuesday, May 18, 2010

மர்ம யோகி 1

ஏறக் குறைய 9000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரிய பிராமணர்க்கு மகனாக பிறந்தார் இவர் குஜராத் மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் கல்வி பயின்ற இவர் அங்கிருந்து கிளம்பி குமரி கண்டத்தை ஆண்டு வந்த ராவணனிடம் சென்று தனக்கென ஒரு ராச்சியத்தையே பெற்று ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவினார் அப்போது கடல்கோள் வரவே அங்கிருந்து கிளம்பி தோரணமலை வந்து ஒரு பெரிய ஆய்வுக் கூடத்தை நிறுவினார் பின்னர் கடல் கோள் வராத இடம் என பொதிகை மலையை  தேர்ந்து இன்னமும் அங்கு தன்னை தேடி வருபவர்க்கு போதிக்கிறார் தெரிந்த ஆள்தான் பெயர் அகத்தியர் என்று சொல்வார்கள் இவர் உடன் சுப்ரமணியரும் [அதாங்க நம்ம முருகக்கடவுள் ]சேர்ந்துதான் தமிழ் மொழியை உருவாக்கினார்கள் என்று பிரபஞ்சசாரம் என்ற பழைய ஓலைச் சுவடி சொல்கிறது  உண்மை என்றோ இல்லை என்றோ மறுக்க முடியாது கும்பமுனி குறுமுனி அகத்தியர் பற்றி உலவும் எத்தனையோ கதைகளில் இது ஒன்று தொல்காப்பியத்துக்கு முன்பாக அகத்தியர் இயற்றிய அகத்தியம்  பற்றி குறிப்புகள் மட்டும் கிடைக்கின்றன ஆனால் எந்த ஒரு கோயிலுக்குப் போனாலும் அந்த தல வரலாற்றுடன் அகத்தியர் சம்பந்தமாக ஒரு கதை இருக்கும் அவர் சிறு வேடத்திலாவது வராத புராணமோ இதிகாசமோ இல்லை எல்லா சித்தருக்கும்  தலையாய சித்தர் வைத்திய நூல்கள் மட்டும் அல்ல  ரசவாதம் மாந்திரீகம் ஜோதிடம் என்று எழுதிக் குவித்தவர் [உங்களால் நம்ப முடிந்தால் ] இன்னமும் நாடிஜோதிடம் மூலமாக நம்முடன் உரையாடுபவர்  பின்னால்  ஹிந்து மதத்தில் ஆதிசங்கரர் செய்த வேலைகளை பல காலம் முன்பே செய்தவர் தமிழிலும் சனாதன தர்மத்திலும் தவிர்க்கவே முடியாத ஒரு ஆளுமை அகத்தியர் யார் இவர் இவர் பின்புலம் என்ன என்று ஒரு  சிறிய பிரயாணம்....

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails