Thursday, May 20, 2010

மர்ம யோகி அகத்தியர் 2


பத்து வருடங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்துக்கு வந்ததும் முடி கொட்டிய கரடி போல் இருந்த ஒருவரை நண்பர் அறிமுகப் படுத்தினார் பரம்பரை  சித்த வைத்தியர் என்று சொன்னதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து நான் சிந்தாமணி வைத்தியர் என்றார் சிந்தாமணி வைத்தியமுறை குமரி மாவட்டத்தில் மட்டுமே தற்போது இருக்கிறது அது ராவணன் ஏற்படுத்திய வைத்தியம் நான் சந்தேகத்துடன் சீதையை தூக்கிப் போன ராமாயண ராவணனா என்றதற்கு அவர் மிகுந்த கோபமுற்று சீதையை ராவணன் தூக்கிப் போகவில்லை அது ஆரியர்களின் கட்டுக்கதை என்றார் அப்படியானால் சீதை தானாக இலங்கைக்கு  சுற்றுலா போய்விட்டாளா என்று நான் கேட்டதற்கு சற்றும் அசராமல் ஆமாம் என்றார் சீதையின் பிறப்பில் உள்ள ரகசியம் உங்களுக்கு தெரியுமா சீதை ஜனகனின் வளர்ப்பு மகள் மட்டுமே உண்மையில் சீதை ராவணனின் மகள் அப்படியானால் ராமன் தான் சீதையை தூக்கிப் போயிருக்க வேண்டும் என்றார் எனக்கு லேசாக தலை சுற்றுவது போல் இருந்து சமாளிப்பதற்குள் அகத்தியர் ஒரு ஆரிய உளவாளி என்ற அடுத்த குண்டை வீசினார்                                                                                                                                        அவர் கருத்துப் படி தமிழர்களின் வைத்தியமுறைகளை கடத்திவர அனுப்பப் பட்டவர் தான் அகத்தியர் உண்மையான தமிழ் மருத்துவத்தின் தந்தை ராவணனே அவனது பல நூல்கள் அழிக்கப் பட்டன அல்லது  மறைக்கப் பட்டன ஆயுர்வேதம் என்பது திருடப் பட்ட சித்த [சிந்தாமணி]மருத்துவமே ஆகவே எல்லா சித்த மருத்துவக் கல்லூரிகளிலும் ராவணன் சிலை நிறுவப் பட வேண்டும் !                                                                                                                           வரலாறு என்பது எப்போதுமே வென்றவர் எழுதுவது ராம ராவண யுத்தத்தில் ராவணன் வென்றிருந்தால் வேறுவிதமான பார்வை உள்ள சரித்திரமே நமக்கு கிடைத்திருக்கும் அகத்தியர் பற்றியும் ராவணன் பற்றியும் வைத்தியர் சொன்னது ஒரு எதிர்வரலாறு பொது வெளியில் நாம் கேட்கும் வரலாறுகளுக்கு மாற்றான இந்த வரலாறுகள் உண்மையோ இல்லையோ ஒரு சமூகத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி ஒரு முழுச் சித்திரத்தை அளிக்கின்றன புத்தகச் சந்தையில் இஸ்லாம் தமிழர் சமயம் என்று கூட புத்தகம் பார்த்தேன் டாவின்சி கோட் போன்றவைகளும் எதிர் வரலாறு தான்                
                            ராவணன் எழுதியதாக சிலநூல்களே இப்போது கிடைக்கின்றன ராவணன் நாடி சாஸ்திரம் ராவண சம்ஹிதா என்ற இரண்டு நூல்கள் விநோதமாக இரண்டுமே தமிழில் கிடைக்கவில்லை !ராவண நாடி சாஸ்திரம்  என்ற பேரில் நர்மதா பதிப்பகம் தமிழில் ஒரு நூல் வெளியிட்டுள்ளது மாற்றாக ''ஆர்ய உளவாளி '' அகத்தியரின் எல்லா நூல்களும் தமிழில்தான் கிடைக்கிறது சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்தியரின் ஒரு சம்ஸ்கிருத நூல் கூட கிடைக்கவில்லை !                                                                                                          முதலில் அகத்தியர் என்று நாம் குறிப்படுவது ஒரு ஆளைத்தானா என்பதே சந்தேகம் ராமாயணத்தில் ராவணனை வெல்ல ஆதித்ய ஹிருதயம் ராமனுக்கு  சொல்லிய அகத்தியரும் கும்ப முனியும் சித்த வைத்தியர் அகத்தியரும் ராவணனிடம் இசைப் போட்டியில் வென்றவரும் நாடி ஜோதிடர் அகத்தியரும் ஒரே ஆள்தான்  என்று அடித்து சொல்பவரும் 37 அகத்தியர்கள் உண்டு [சமீபத்திய கணக்கு ]என்று உதைத்து சொல்பவரும் உண்டு இதேபோல் ராவணனும் பல ராவணன்கள் இருக்கலாம் [ராவணன் எத்தனை ராவணனடி!]                       

    அகத்தியருக்கு பல இடங்களில் கோயில்கள் உண்டு ராவணனுக்கும் மத்திய இந்தியாவில் கோயில் இருப்பதாக கேள்வி திருநெல்வேலி நெல்லைஅப்பர் கோயிலில் ராவணன் சிலை உண்டு முன்பு வழிபாடும் இருந்ததாக சொல்கிறார்கள் எல்லாம் ராமனுக்கே வெளிச்சம்

3 comments:

VELU.G said...

புது தகவல்கள் நன்றி

Anonymous said...

// ராமாயணத்தில் ராவணனை வெல்ல ஆதித்ய ஹிருதயம் ராவணனுக்கு சொல்லிய அகத்தியரும் //??????????

bogan said...

திருத்தி விட்டேன் கவனப் பிழை நன்றி

LinkWithin

Related Posts with Thumbnails