Sunday, June 27, 2010

மர்மயோகி அகத்தியர் 7

உலகம் அணுக்களால் ஆனது என்ற கருதுகோள் ஒன்றும் புதிய கருத்து அல்ல.குறைந்தது  2000 வருடங்களாவது இந்த கருத்து மனிதனை வசீகரித்து வந்திருக்கிறது.இந்த அணுக்களின் அமைப்பை மாற்றுவதன் மூலம் நாம் விரும்பும் வகையில் பிரபஞ்சத்தையும் அமைத்துக் கொள்ளலாம்.என்ற கருத்துதான் சித்தர்களை ரசவாதம் நோக்கி ஈர்த்திருக்க வேண்டும்.முன்பே சொன்னது போல சித்தர்கள் மதவாதிகளைப் போல இந்த பிரபஞ்சம் அதன் அத்தனை விதிகளுடனும் முழுமையாக கடவுளால் படைக்கப் பட்டு வெளியிடப் பட்டது என்பதை நம்பவில்லை.தொடர்ச்சியாக இந்த பிரபஞ்சத்தில் மாற்றங்களும் மேம்படுத்துதலும் செய்ய இயலும் என்றே நம்பினார்கள்.இன்றைய அறிவியலும் ஏறக்குறைய இதே நோக்கில் தான் செயல்படுகிறது .இல்லையா?[மென் பொருட்களுக்கு புதிது புதிதாய் பதிப்புகள் வருவது போல.]ஆனால் அவர்கள் இறை என்ற விஷயத்தை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எல்லாவற்றுக்கும் ஆதாரமான பொருளை இறைதான் படைக்கிறது.சில சித்தர்கள் அதில் கூட வேறுபட்ட கருத்துக்கள் கொண்டிருந்தனர்.விஸ்வாமித்திரர் திரிசங்கு சொர்க்கம் படைத்தது போல சித்தர்களின் சில செயல்கள் பிரம்மனையும் சிவனையுமே  கலவரம் அடையச் செய்ததாக கதைகள் கேட்கலாம்.சில பிரபஞ்ச ரகசியங்களை வெளியிடக் கூடாது என்று சில சித்தர்களுக்கு சித்தர் குழாமால் அழுத்தம் தரப் பட்ட செய்திகளை அறியமுடிகிறது.இந்த மாதிரி விசயங்கள் தீயவர் கைகளில் சேர்ந்து விடக் கூடாது என்று எச்சரிக்கையுடன் இருந்திருக்கின்றனர்.இந்த காரணம் கொண்டே அவர்கள் நூல்களை சந்தி பாஷையில் எழுதி வைத்தனர்.
இன்றைய அறிவியல் ஏறக் குறைய இதே நோக்கில்தான் நகர்கிறது.அறிவியலும் பிரபஞ்சத்தின் அமைப்பு அணுக்களினால் ஆனது என்கிறது.அதன் அமைப்பை மாற்றுவதன் மூலம் பெரும் சக்தி கிடைக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறது.ஆனால் அந்த சக்தி தீவிரவாதிகள் கைகளில் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காய் படாத பாடு படுகிறது.ரசவாதத்தின் மூலம் சித்தர்கள் சாதாரண உலோகங்களை தங்கமாக்கினர்  எனப் படுகிறது.நவீன அறிவியலின் மூலமும் இதை செய்யமுடியும்.என்ன தங்கத்தின் விலையை விட அதிகம் செலவாகும் .சித்தர்கள் இந்த காரியத்தை மூலிகைகள் மூலமும் பாதரசம் போன்ற தனிமங்கள் மூலமும் சாதித்தனர்.அதாவது இயற்கையில் உள்ள பொருட்களையே எடுத்து இயற்கையை வளைத்தனர்.

இதே நோக்கில்தான் அவர்கள் மனித உடலையும் அணுகினர்.அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்பது அவர்கள் நோக்கு.அதாவது பிரபஞ்சமும் மனிதனும் ஒரே விதிகளால் ஆனவர்கள்தான்.புற உலகில் உள்ள எல்லா விசயங்களும் மனித உடலுக்குள்ளும் இருக்கின்றன.அதாவது சிறிய அளவில்.புற உலகில் ஏற்படும் மாற்றங்கள் எவ்விதம் மனிதனைப் பாதிக்கிறதோ அது போல் மனித உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மூலம்  புற உலகையும் பாதிக்கலாம்.சித்தர்களின் சித்து விளையாட்டுக்களின் அடிப்படைத் தத்துவம் இதுவே.

 இன்னும் விளக்குகிறேன்.தங்கம் போன்ற பல  உலோகங்கள் நமது உடலிலும் உள்ளன .[சிறிய அளவில்]சித்தர்கள் ஆணின்  விந்தையே பாதரசமாக சொல்வார்கள்.பெண்ணின் சுரோணிததை கந்தகமாகக் கொள்வார்கள்.இரண்டும் எதிர் எதிர் நிலைகள்.ஆனால் இரண்டும் இல்லாமல் படைப்பு நிகழாது.ஆனால் பாதரசம் அப்படியே பயன் படாது.அந்த நிலையில் அது கடும் விஷம்.அதை சுத்தம் செய்து மாற்ற வேண்டும்.பாதரசத்துக்கு ஏழு சட்டைகள் உண்டென சித்தர் பாஷையில் சொல்வார்கள்.அதாவது ஏழு மாசுகள்.அவை எல்லாவற்றையும் சுத்திகரித்த பிறகே அது ரசவாதத்துக்கு பயன்படும்.அதே போலதான் விந்தும் .சித்தர்களின் உடற்கூறு படி மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனது.நாம் உண்ணும் உணவு ரத்தம் மாமிசம் என்று ஒவ்வொரு தாதுவாய் மாற்றம் பெற்று வந்து  ஏழாம் மற்றும் கடைசித் தாதுவான விந்தாய் மாறுகிறது!புரிகிறதா?சித்தர்கள் விந்து விட்டான் நொந்து கெட்டான் என்று ஏன் சொன்னார்கள் என்று?

இந்த காரணம் கொண்டே சித்தர்கள் மருத்துவத்திலும் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தினார்கள்.ரசவாதத்தில் பயன்படும் அதே மூலிகைகளையே மருத்துவத்திலும் பயன் படுத்தினார்கள்.விந்தையும் சுரோணிததையும் காம மற்றும் ஜனப் பெருக்க காரியங்கள் தவிர வேறு உத்தேசங்களுக்கும் பயன் படுத்தலாம் என்பது அவர்கள் துணிபு.

2 comments:

இர.கோகுலன் said...

this post gives much datas...
best wishes to you my friend.....
valthukal..

Vasishtar said...

ur blog is very different and interesting too.

LinkWithin

Related Posts with Thumbnails